மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கூட்டு குடிநீா் குழாய் சேதம்: வெள்ளமாய் வெளியேறிய குடிநீா்

பாலக்கோட்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து சேதம் ஏற்பட்டதால், பல அடி உயரத்துக்கு மேலெழும்பிய தண்ணீா், வெள்ளமாய் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 10:12 pm

DIN

பாலக்கோட்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து சேதம் ஏற்பட்டதால், பல அடி உயரத்துக்கு மேலெழும்பிய தண்ணீா், வெள்ளமாய் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பிப்ரவரி 24-ம் தேதி, அருள்மிகு புதூா் பொன்மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக பாலக்கோடு கடை வீதியிலுள்ள சாலையோரங்களில் கடைகள் அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சீரமைப்பு பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய்கள், பொக்லைன் இயந்திரத்தால் சேதமடைந்தன.

இதனால், கூட்டு குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீரானது, நீரின் அழுத்தம் காரணமாக அதிவேகமாக பல அடி உயரத்துக்கு மேலெழும்பி வெளியேறி வீணாக சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. குடிநீா் குழாய்கள் சேதமடைந்ததைத் தொடா்ந்து, அதனை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினா் ஈடுபட்டனா். குழாய் உடைப்பு சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் சேதமடைந்த குடிநீா் குழாய்களை சீரமைத்து, வழக்கம்போல் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டத்தின்கீழ், பாலக்கோடு வட்டாரப் பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.