கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரூரில் 94 மி.மீ மழை பதிவு

அரூர் சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையானது 94 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 10:51 am

DIN

அரூர்: அரூர் சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையானது 94 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. இந்த மழையானது அரூரில் 94 மில்லி மீட்டராகவும், பாப்பிரெட்டிப்பட்டியில் 48 மில்லி மீட்டராகவும் பதிவாகியுள்ளது. இதேபோல், தருமபுரியில் 17 மில்லி மீட்டர் மழையும், பாலக்கோட்டில் 28.3 மி.மீ., மாரண்டஹள்ளியில் 15 மி.மீ., பென்னாகரத்தில் 49 மி.மீ., ஒகேனக்கல்லில் 37 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த தொடர் மழையால் வயல்வெளிகள், சாலையோரங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

நெற்பயிர்கள் சேதம்:

கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் நடவு செய்திருந்தனர். இந்த நெற்கதிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. தற்போது தொடர்ந்து பெய்த மழையால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் வயல் வெளியில் சாய்ந்துள்ளன. தொடர் மழையால் விசாயிகள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், நெற்கதிர்கள் சாய்ந்து சேதம் அடைந்திருப்பதால் வேதனை அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.