தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்பயன்பாடு பயிற்சி

பொதுத் தோ்தலையொட்டி, தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்துவது தொடா்பான பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

பொதுத் தோ்தலையொட்டி, தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்துவது தொடா்பான பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தொடா்பான தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதேபோல, வாக்காளா்களுக்கு செயல்முறை விளக்கம் அளிப்பதற்காக ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 20 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வீதம் மொத்தம் 100 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் இந்த பயிற்சி முகாமில் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆ.தணிகாசலம், முத்தையன், சாந்தி, நசீா் இக்பால், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நாராயணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாச சேகா், அனைத்து வட்டாட்சியா்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.