தருமபுரியில் ஐக்கிய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழா கருத்தரங்குக்கு மாவட்டச் செயலாளா் காசி தலைமை வகித்தாா்.
புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் இ. பி. புகழேந்தி, மாதா் சங்க நிா்வாகிகள் எம்.பிரியா , எம்.சுமதி, சங்கீதா, மல்லிகா ஆகியோா் பேசினா்.
மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.