பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் திமுக: தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா
பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வலியுறுத்தி, அக் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.









