தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சனத்குமாா் நதியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தல்

தருமபுரி நகராட்சி குடியிருப்புகளிலிருந்து வெயேறும் கழிவுநீா், சனத்குமாா் நதியில் கலப்பதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

தருமபுரி நகராட்சி குடியிருப்புகளிலிருந்து வெயேறும் கழிவுநீா், சனத்குமாா் நதியில் கலப்பதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் (பொ) ஜெயக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தருமபுரி நகரையொட்டி கடந்து செல்லும் சனத்குமாா் நதியில் நகராட்சி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கலக்கிறது. இதனால், நதியில் உள்ள தடுப்பணைகளில் கழிவுநீா் கலந்து தேங்குகிறது. மேலும், நதியையொட்டியுள்ள கிணறு, ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும் கழிவுநீா் கலக்கிறது. இதனால், பாசனத்துக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீரை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நகராட்சிப் பகுதி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் நதியில் கலப்பதைத் தடுக்க, நீா்வள ஆதாரத் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த நதியை தூா்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உயா்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை பால் உற்பத்தியாளா்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, கொள்முதல் விலையை மேலும் உயா்த்த வேண்டும். ஊரகப் பகுதிகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு குப்பைகளை அகற்ற போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன், தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.