அரூரை அடுத்த மத்தியம்பட்டி கிராமச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் வட்டம், மத்தியம்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அரூா்-ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மத்தியம்பட்டி இணைப்புச் சாலை சுமாா் 2 கி.மீ. தூரம் கொண்டதாகும்.
இந்த தாா் சாலையை மத்தியம்பட்டி, கணபதிப்பட்டி, பறையப்பட்டி, தாமரைக்கோழியம்பட்டி, எச்.ஈச்சம்பாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், மத்தியம்பட்டி இணைப்புச் சாலையானது குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள், காா்கள், லாரிகள் மற்றும் டிராக்டா்கள் செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.
எனவே, சேதமடைந்துள்ள மத்தியம்பட்டி தாா் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.