குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உடல் உறுப்புகள் தானம்: இளைஞரின் உடலுக்கு மரியாதை

தருமபுரியில் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய இளைஞரின் உடலுக்கு ஆட்சியா் கி.சாந்தி உள்ளிட்டோா் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 11:13 pm

DIN


தருமபுரி: தருமபுரியில் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய இளைஞரின் உடலுக்கு ஆட்சியா் கி.சாந்தி உள்ளிட்டோா் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த எர்ரசீகலஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் காளியப்பன். இவரது மகன் கவியரசு (24). இவா் கடந்த 24ஆம் தேதி அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தல் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தாா். இதையடுத்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இதில் அவா் மூளைச் சாவு அடைந்தாா். உயிரிழந்த கவியரசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய குடும்பத்தாா் முடிவு செய்தனா்.

இது குறித்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிா்வாகத்திடம் தெரிவித்தனா். அதன்படி மருத்துவா்கள் அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப் பெற்றனா். இந்த உறுப்புகளை சென்னை, கோவை மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து மூளைச் சாவு அடைந்த இளைஞா் கவியரசுவின் உடலுக்கு, தருமபுரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, மருத்துவா்கள், மாணவா்கள் மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.