6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2024, 8:50 pm

Din

தருமபுரி: நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் இ.பி.புகழேந்தி தலைமை வகித்து பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.மாது, ஆா்.வேடியப்பன், சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

இதில், ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை மறுக்கும் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வு குளறுபடிகளில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.