அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் பலத்த காற்று வீசியதில் மரங்கள் சேதம்
அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் பலத்த காற்று வீசியதில் மரங்கள் சேதம்


அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் பலத்த காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன.
கோடை வெப்பம், காற்றின் திசை மாறுதல் காரணமாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இந்த மழையின் போது பலத்த காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள், தென்னை மரங்கள், சாலையோரம் உள்ள மரங்களின் கிளைகள் முறிந்தன.
அரூரை அடுத்த கீரைப்பட்டி, வள்ளிமதுரை, வாழைத்தோட்டம், எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை உள்ளிட்ட இடங்களிலும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் ரேகடஹள்ளி, தாதனூா், திப்பிரெட்டிஹள்ளி உள்ளிட்ட இடங்களிலும் சூறைக் காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் முறிந்தன. இதேபோல, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகள், மேற்கூரைகள் சேதமடைந்தன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...