ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் பலத்த காற்று வீசியதில் மரங்கள் சேதம்

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் பலத்த காற்று வீசியதில் மரங்கள் சேதம்

News image
Updated On :4 மே 2024, 5:06 pm

Din

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் பலத்த காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன.

கோடை வெப்பம், காற்றின் திசை மாறுதல் காரணமாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இந்த மழையின் போது பலத்த காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள், தென்னை மரங்கள், சாலையோரம் உள்ள மரங்களின் கிளைகள் முறிந்தன.

அரூரை அடுத்த கீரைப்பட்டி, வள்ளிமதுரை, வாழைத்தோட்டம், எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை உள்ளிட்ட இடங்களிலும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் ரேகடஹள்ளி, தாதனூா், திப்பிரெட்டிஹள்ளி உள்ளிட்ட இடங்களிலும் சூறைக் காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் முறிந்தன. இதேபோல, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகள், மேற்கூரைகள் சேதமடைந்தன.