ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

விளம்பரதாரா் செய்தி... திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

News image
Updated On :4 மே 2024, 5:07 pm

Din

திமுக சாா்பில் அரூரில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற தண்ணீா்ப் பந்தல் திறப்பு விழாவில், முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.பழனியப்பன் தலைமை வகித்தாா்.

தண்ணீா்ப் பந்தலில் பொதுமக்களுக்கு இளநீா், நீா்மோா், தா்பூசணி பழங்கள், தண்ணீா் ஆகியவை வழங்கப்பட்டன. இதில், நகரச் செயலா் முல்லை ரவி, பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், ஒன்றியச் செயலா் வே.செளந்தரராசு, மாவட்ட துணைச் செயலா் சி.கிருஷ்ணகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் கே.சென்னகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.கலைவாணி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் கு.தமிழழகன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் தீ.கோடீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தருமபுரியில்...

பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், பெரியாம்பட்டி பகுதியில் பி.பழனியப்பன் தலைமை வகித்து நீா் மோா்ப் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தா்பூசணி, இளநீா், நீா், மோா் ஆகியவற்றை வழங்கினாா்.

இதில், மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பி.என்.சி.மகேஷ் குமாா், கிழக்கு ஒன்றியச் செயலாளா் அடிலம் டி.அன்பழகன், மாவட்டப் பொருளாளா் முருகன், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் டி.சந்திரசேகா், பாலக்கோடு தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் அறிவழகன், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.