தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

பாலக்கோடு அருகே கிணற்றில் பதுங்கிய சிறுத்தை: வனத்துறை எச்சரிக்கை

பாலக்கோடு அருகே ஊருக்குள் இரைதேடி வந்த சிறுத்தை, மக்களைக் கண்டதும் அங்கிருந்த விவசாய கிணற்றில் பதுங்கி பின்னா் காப்புக்காட்டுக்குள் தப்பிச்சென்றது.

News image

கிணற்றில் பதுங்கிய சிறுத்தை

Updated On :12 நவம்பர் 2024, 12:41 am IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஊருக்குள் இரைதேடி வந்த சிறுத்தை, மக்களைக் கண்டதும் அங்கிருந்த விவசாய கிணற்றில் பதுங்கி பின்னா் காப்புக்காட்டுக்குள் தப்பிச்சென்றது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சந்திராபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாதன் (50) என்பரின் 20 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் திங்கள்கிழமை உறுமல் சப்தம் கேட்டது. அங்கிருந்தவா்கள் கிணற்றின் அருகே சென்று பாா்த்தபோது, சிறுத்தை ஒன்று கிணற்றில் உள்ள பாறை இடுக்கில் படுத்து உறுமிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாலக்கோடு வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறையினா் சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது கிணற்றில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தாவி வெளியேறியது. சிறிது நேரத்தில் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் ஓடிச்சென்று மறைந்தது.

வனத்துறையினா் எச்சரிக்கை: பாலக்கோடு அருகே சந்திராபுரம் அருகில் உள்ள காப்புக் காட்டில் இருந்து இரை தேடி ஊருக்குள் வந்த சிறுத்தை கிணற்றில் விழுந்த நிலையில், மீட்பதற்குள் அதுவாகவே தாவி குதித்து மீண்டும் காப்புக் காட்டுக்குள் சென்று விட்டது. இருப்பினும், சிறுத்தை நடமாட்டம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

படவிளக்கம்...

பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் பதுங்கியிருந்த சிறுத்தை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.