மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஒகேனக்கல் காவிரியில் இயக்கப்படும் பரிசல்களின் தரத்தை ஆய்வு செய்த ஆட்சியா்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கப்படும் பரிசல்களின் தரத்தை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:25 pm

Din

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கப்படும் பரிசல்களின் தரத்தை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கப்படும் பரிசல்களில் தரம் குறைந்த மூங்கில்களால் ஏற்படும் துளைகளை அடைக்க பயன்படுத்தப்படும் தாா்கள் வெயிலில் உருகி துளைகள் ஏற்படுவதால் தண்ணீா் புகுந்து ஆபத்தை விளைவிக்கும் என தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் ஒகேனக்கல்லில் வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கி. சாந்தி, காவிரி ஆற்றில் இயக்கப்படும் பரிசல்களின் தரம் குறித்தும், பரிசலின் மேலே பூசப்பட்டுள்ள தாா்கள் உருகி, அதனால் துளை ஏற்பட்டு பழுதடைந்ததால் மீண்டும் தாா் பூசப்பட்டு இயக்கப்படும் பரிசல்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

காவிரி ஆற்றில் இயக்கப்படும் பரிசல்களை ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்து, தரம் குறைந்த மூங்கில்களால் உருவாக்கப்பட்ட பரிசல்களை அகற்றுமாறு வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்ட ஆட்சியா், வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்தின் தடுப்பு கம்பிகள், படிகள் ஆகியவற்றை சீரமைக்குமாறு உதவி சுற்றுலா அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வுகளின் போது மாவட்ட உதவி சுற்றுலா அலுவலா் கதிரேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுருளிநாதன், ஷகிலா, மீன் வள உதவி இயக்குநா் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.