அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சட்டக் கல்லூரி மாணவா்கள் சாலையைக் கடக்க நடைமேம்பாலம்

மாட்லாம்பட்டியில் நடைமேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

தருமபுரி அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் தேசிய நெடுஞ்சாலையை பாதுகாப்பாக கடந்துசெல்லும் வகையில், நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மாட்லாம்பட்டி பிரிவு சாலையில் அரசு சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் 200 மாணவ, மாணவியா் இளநிலை மற்றும் முதுநிலை சட்டக் கல்வியை பயின்று வருகின்றனா். இவா்களைத் தவிர, கல்லூரி பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், ஊழியா்களும் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் கல்லூரிக்கு செல்லவும், கல்லூரியிலிருந்து வீடுகளுக்கு திரும்பவும் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இச்சாலையை பாதுகாப்பாக கடந்து செல்ல ஏதுவாக தற்போது, சாலையின் இருபுறங்களையும் இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.