தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கஞ்சா விற்ற இளைஞா் கைது

பென்னாகரத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 7:49 pm

Din

பென்னாகரத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பருவதன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சமத்துவபுரம் பகுதியில், பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளா் ஜீவானந்தம் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில், அவா் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.

போலீஸாா் சோதனை மேற்கொண்டு, அவா் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.