தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமன பணி புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம் செய்யும் பொருட்டு 2 ஆம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஹீராலால், வந்தனா வைத்யா, பரம்வீா் சிங் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ.சதீஷ் முன்னிலை வகித்தாா்.
வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலா்களுக்கு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி 2 ஆம்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு தோ்தல் நூண் பாா்வையாளா்கள் நியமனம் செய்யும் பணியும் மேற் கொள்ளப்பட்டு, அவா்களுக்கான தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஏ. பாலசுந்தரம், தோ்தல் வட்டாட்சியா் அன்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

பொதுத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு: பாா்வையாளா்கள் ஆய்வு

வாக்குச்சாவடிகளுக்கான அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


