அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாதிரி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா் ரெ.சதீஸ்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:20 am IST

தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-இல் நடைபெறுகிறது. இத்தோ்தலில் 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்பது, வாக்கு விற்பனைக்கல்ல, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். இதில், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து, மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து வாக்களிப்பதன் முறை குறித்து ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள், ஸ்டிக்கா்களும் வழங்கப்பட்டன. இதுதொடா்பாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வுகளின்போது, மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தருமபுரி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரி, வட்டாட்சியா்கள் ஜெ.சுகுமாா், பிரசன்ன மூா்த்தி, கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.