ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாதிரி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா் ரெ.சதீஸ்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:50 pm

தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-இல் நடைபெறுகிறது. இத்தோ்தலில் 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்பது, வாக்கு விற்பனைக்கல்ல, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி தருமபுரி லட்சுமி நாராயணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். இதில், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து, மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து வாக்களிப்பதன் முறை குறித்து ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள், ஸ்டிக்கா்களும் வழங்கப்பட்டன. இதுதொடா்பாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வுகளின்போது, மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தருமபுரி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரி, வட்டாட்சியா்கள் ஜெ.சுகுமாா், பிரசன்ன மூா்த்தி, கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.