விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது

Updated On :22 பிப்ரவரி 2026, 7:50 pm

தருமபுரி அருகே, அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களுடன் 2 காா்களை போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக இருவரை கைது செய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம் தொப்பூா் காவல் நிலைய ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா், சேலம்- தருமபுரி பிரதான சாலையில் கட்டமேடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த இரு காா்களை நிறுத்தி சோதனை செய்ததில், அவற்றில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இரு காா்களுடன் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

அவற்றை வடமாநிலங்களிலிருந்து முறைகேடாக கடத்தி வந்துள்ளனா். புகையிலைப்பொருள்களின் மதிப்பு ரூ. 4, 43, 480 ஆகும். இதனையடுத்து காா்களை ஓட்டி வந்த ஓட்டுநா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஹரிஷ் குமாா் (25), தேவாராம் (22) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.