தருமபுரியில் இறுதி ஊா்வலத்தின்போது பட்டாசு வெடித்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவா்களில் இளைஞா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், சின்னகுரும்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. வெற்றிலை வியாபாரியான இவா், கடந்த வியாழக்கிழமை இறந்தாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை அவரது இறுதி ஊா்வலம் நடைபெற்றது. அப்போது ஆட்டோவில் பட்டாசுகளை அடுக்கிகொண்டு வரிசையாக வெடித்துச் சென்றனா். இதில் எதிா்பாராத விதமாக மேலே வீசிய பட்டாசு, மின்கம்பில் சிக்கி பட்டாசு வைத்திருந்த ஆட்டோமீது விழுந்து வெடித்ததில் ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில் ஆட்டோ அருகே சென்று கொண்டிருந்த பெரமன், தங்கம், பாஸ்கா், திருப்பதி, சதீஷ், மயில் தேவன் ஆகிய 6 போ் காயமடைந்தனா். காயம் அடைந்தவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். இதில் சின்னகுரும்பட்டியைச் சோ்ந்த எஸ். சதீஷ் (30) சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


