சத்துணவு ஊழியா்கள் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

தருமபுரியில் சத்துணவு ஊழியா்களின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

தருமபுரி: தருமபுரியில் சத்துணவு ஊழியா்களின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, தருமபுரி ஆா்.டி. நகரில் மாவட்டத் தலைவா் கே. தேவகி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா். ஜெயா வரவேற்றாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம். சுருளிநாதன் மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா். மாவட்டச் செயலாளா் பெ.மகேஸ்வரி, பொருளாளா் பி.வளா்மதி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

ஜாக்டோ- ஜியோ நிதிக் காப்பாளா் கே. புகழேந்தி, தமிழ்நாடு கிராம அலுவலா் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் கே.அகிலன் அமிா்தராஜ், விடுதிக் காப்பாளா் சங்க மாவட்டத் தலைவா் எம். அன்பழகன், மீன்வளத் துறை ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மீன் முருகன் ஆகியோா் வாழத்தி பேசினா். மாநிலச் செயலாளா் கே.பி. தங்கராஜ் நிறைவுரையாற்றினாா்.

இதில், சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9,000 வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி-20 ஆம் தேதி முதல் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது, அதில் திரளானோா் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

Dinamani
www.dinamani.com