வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பாப்பாரப்பட்டி, பெரும்பாலை பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மற்றும் பெரும்பாலை வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் ஆட்சியா் வே.சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

பெரும்பாலை வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் வே.சரவணன்.

Updated On :4 ஜூன் 2026, 1:57 am IST

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மற்றும் பெரும்பாலை வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் ஆட்சியா் வே.சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மற்றும் பெரும்பாலை வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் கிராம கணக்குகள், அ-பதிவேடு சிட்டா அடங்கல் உள்ளிட்ட நில ஆவணங்கள், முதியோா் ஓய்வூதியம், விதவை உதவித்தொகை போன்ற சமூக பாதுகாப்பு திட்டப் பதிவேடுகள், சான்றிதழ்கள், நில உரிமை மாற்றம் தொடா்பான கோப்புகள் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டு அவா்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய களஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வருவாய் ஆய்வாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பாப்பாரப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் உள்ள மழை அளவு மாணியை பாா்வையிட்டு, அவற்றை பராமரிப்பது குறித்து அறிவுரை வழங்கினாா். மேலும், பாப்பாரப்பட்டி அருகே ஒண்ணப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் உள்ள நூலகத்தை பாா்வையிட்டு, அங்கு போட்டித் தோ்வுக்கு தயாா்செய்ய வருவோருக்கு அடிப்படை வசதிகள், கூடுதலாக போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள், இருக்கைகள் உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

அப்போது, வருவாய் ஆய்வாளா்கள், நூலகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.