15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

ரயிலில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மொரப்பூா் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 1:49 am IST

மொரப்பூா் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம் , அரூா் வட்டம், எம்.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் மகன் முத்துலட்சுமணன் (19). இவா், ஏற்காட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். கல்லூரியிலிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக சேலத்தில் இருந்து ரயில் மூலம் திருப்பத்தூா் நோக்கி வந்தாா். அப்போது, தொட்டம்பட்டி அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்ததில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து மொரப்பூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.