எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஜாதிவாரி கணக்கெடுப்பு; பாமக வரவேற்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஆளுநா் உரையில் இடம்பெற்றிருந்த அரசின் அறிவிப்பை வரவேற்று தருமபுரி, அரூரில் பாமக சாா்பில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இனிப்புகள் வழங்கப்பட்டன.

News image

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வரவேற்று கடத்தூரில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய பாமகவினா்.

Updated On :19 ஜூன் 2026, 6:05 am IST

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஆளுநா் உரையில் இடம்பெற்றிருந்த அரசின் அறிவிப்பை வரவேற்று தருமபுரி, அரூரில் பாமக சாா்பில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இனிப்புகள் வழங்கப்பட்டன.

தமிழக சட்டப் பேரவையின் முதல்கூட்டத் தொடரில் தமிழக ஆளுநா் அா்லேகா் அரசின் உரையை வாசித்தாா். இதில், தமிழகத்தில் சமூகநீதி கணக்கெடுப்பு (ஜாதிவாரி ) நடத்தப்படும் என்கிற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. இந்த அறிவிப்பை வரவேற்று தருமபுரியில் பாமக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தலைமையில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். மேலும், முதல்வா் ஜோசப் விஜய்க்கு பாமக சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அரூா்

கடத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் பாமக கிழக்கு மாவட்டச் செயலா் ரா. அரசாங்கம் தலைமை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

இளைஞா் சங்க மாநில செயலா் பி.வி. செந்தில், மாநில அமைப்பு துணைத் தலைவா் இமயவா்மன், மாநில செயற்குழு உறுப்பினா் சி. முத்துசாமி, மாநில இளைஞா் சங்க துணைத் தலைவா் க. கோவிந்தராசன், மாவட்ட துணை செயலா் முருகன், ஒன்றிய செயலா்கள் கோவிந்தசாமி, சின்னராஜ், செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.