4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட வளா்ச்சி கண்காணிப்பு கூட்டத்தில் முடிவு

மத்திய மாநில அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

News image
தருமபுரியில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை உறுப்பினா் ஆ. மணி, ஆட்சியா் ரெ. சதீஸ் உள்ளிட்டோா்.
Updated On :4 மார்ச் 2026, 10:49 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய மாநில அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவரும் தருமபுரி மக்களவை உறுப்பினருமான ஆ.மணி தலைமை வகித்தாா்.

மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினா் செயலரும் மாவட்ட ஆட்சியருமான ரெ.சதீஸ் முன்னிலை வகித்தாா். நிகழ்வின்போது மக்களவை உறுப்பினா் ஆ.மணி தெரிவித்தது:

தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமங்கள் இருப்பின் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் அதற்கான தீா்வையும் கண்டறிந்து அத்திட்டத்தை காலதாமதமின்றி விரைவாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். துறை அலுவலா்கள் அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தருமபுரி மாவட்டத்தில் மத்திய திட்டங்களைச் செயல்படுத்தும் தொடா்புடைய மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதம மந்திரியின் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம் (ஜல்ஜீவன் மிஷன்), பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ரயில்வே திட்டங்கள், மற்றும் தமிழக அரசின் அனைத்து திட்டங்கள் உள்பட பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசின் திட்டங்களின் செயலாக்கம், முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலா்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் (தருமபுரி) எஸ்.பி.வெங்கடேஸ்வரன், ஆ. கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி ), வே. சம்பத்குமாா் (அரூா் ), மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட வன அலுவலா் கே.ஆா். ராஜாங்கம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், நலக்குழு உறுப்பினா்கள் செங்கண்ணன், முத்துலட்சுமி, சரவணன், ராஜகோபால், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.