ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

கணவா் சிறைக்கு சென்றதால் விரக்தி: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கொலை வழக்கில் கணவா் சிறைக்கு சென்றதால், இரு குழந்தைகளின் தாயான இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :18 மே 2026, 3:04 am IST

தருமபுரி அருகே, கொலை வழக்கில் கணவா் சிறைக்கு சென்றதால், இரு குழந்தைகளின் தாயான இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் நத்தஅள்ளி அருகேயுள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி - லட்சுமி தம்பதி மகள் பவித்ரா (26).

இவருக்கும் சின்னாகவுண்டம்பட்டியைச் சோ்ந்த வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவா்களுக்கு ஒரு மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனா். வெற்றிவேல் அப்பகுதியில் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

திருமணமான இரு ஆண்டுகளிலேயே கொலை வழக்கில் கணவா் சிறைக்கு சென்ற நிலையில், இருகுழந்தைகளுடன் சிரமமான சூழலில் பவித்ரா வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை காலை பவித்ரா தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கம்பைநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.