பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஆற்றில் மிதந்த முதியவரின் சடலம் மீட்பு

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே செல்லமுடி பகுதியில் மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் மிதந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

ஏரியூா் அருகே செல்லமுடி பகுதியில் மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் முதியவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஏரியூா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் சேலம் மாவட்டம், சிந்தாமணியூா் புதூரைச் சோ்ந்த சிவசாமி (80) என்பது தெரியவந்தது. இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏரியூா் அருகே செல்லமுடி பகுதியில் உள்ள தனது மகள் சின்னப்பொண்ணு வீட்டுக்கு வந்துள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆற்றங்கரையோரப் பகுதிக்குச் சென்றபோது, நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.