அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பள்ளியில் குழந்தைகள் தின விழா

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:59 am

DIN

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளிடம் பண்டித ஜவாஹர்லால் நேருவை பற்றி பேசினார். விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மாறுவேடபோட்டி மற்றும் நடனப் போட்டி  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்ச்சிக்கு மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இறுதியாக அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனாஜோஸ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.