தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கல்லாவி காவல் நிலையத்தை கோழிநாய்க்கன்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:46 am

DIN

கல்லாவி காவல் நிலையத்தை கோழிநாய்க்கன்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
மேட்டுத்தாங்கல்  ஊராட்சிக்குள்பட்ட  கோழிநாய்க்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் குறித்து அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானதாகப் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக கல்லாவி ஊராட்சிக்குள்பட்ட  பெருமாள் நாய்க்கன்பட்டியைச் சேர்ந்த சில இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,  கோழிநாய்க்கண்பட்டி  கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கல்லாவி காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை  முற்றுகையிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெருமாள்நாய்க்கன்பட்டிகிராமத்தைச் சேர்ந்த ராஜாராம்வளவன் (17)  பிடிபட்டு சேலம் சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாகவும்,  அவரது நண்பர் முருகவேலை (17)  தேடி வருவதாகவும்,  தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  காவல் ஆய்வாளர் வீரப்பன், உதவி ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் கூறினர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.