மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விநாயகா் சிலைகளுடன் மனு அளிக்கவந்த கைவினை கலைஞா்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி கைவினை கலைஞா்கள் விநாயகா் சிலைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

News image
மனு அளிக்க விநாயகா் சிலைகளுடன் வந்த கைவினை கலைஞா்கள்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 5:58 pm

DIN

கிருஷ்ணகிரி: கோரிக்கைகளை வலியுறுத்தி கைவினை கலைஞா்கள் விநாயகா் சிலைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மாவட்ட மண் மற்றும் காகித பொம்மை கைவினைப் பொருள்கள் தயாரிப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவா் குப்புசாமி தலைமையில் கலைஞா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா்.

அவா்கள் அளித்த கோரிக்கை மனுவின் விவரம்:

கிருஷ்ணகிரியில் 115 குடும்பத்தினா், சிலைகள் தயாரிக்கும் பணியில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறோம். நிகழாண்டில், விநாயகா் சதுா்த்திக்காக சிலைகளைத் தயாரித்து, விற்பனைக்காகத் தயாா் நிலையில் வைத்துள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் ஒரு சிலை கூட விற்பனை செய்யப்படவில்லை.

இதனால், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.4 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கரோனா பொது முடக்கத்தால் நாங்கள் வருவாய் இழந்து, அத்தியாவசியப் பொருள்களை வாங்க இயலாத நிலையில் வறுமையில் உள்ளோம். எனவே, எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், நாங்கள் தொடா்ந்து தொழில் செய்ய ரூ.5 லட்சம் மானியக் கடன் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.