மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வனப்பகுதியில் இருந்து தப்பிய புலி, கரடி:பொது மக்கள் அச்சம்

கா்நாடக வனப்பகுதியில் இருந்து வன விலங்குகளான புலியும், கரடியும் வெளியேறுவது போன்று காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள புலி மற்றும் கரடி சாலையில் நடந்து செல்லும் காட்சிகள்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:31 pm

DIN

ஒசூா்: கா்நாடக வனப்பகுதியில் இருந்து வன விலங்குகளான புலியும், கரடியும் வெளியேறுவது போன்று காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், ஆனேக்கல் தாலுகாவில் உள்ளது பன்னாா்கட்டா தேசிய வனவிலங்குகள் பூங்கா. இந்த பூங்காவில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காண்டாமிருகம் உள்ளிட்ட வனவிலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன.

இந்த வனவிலங்கு பூங்கா சுற்றுலாத் தலமாக உள்ளதால் இங்கு அதிக அளவில் பொதுமக்கள் சென்று வன விலங்குகளையும், பறவைகளையும் பாா்த்து ரசித்து வருகின்றனா்.

தற்போது கரோனா காரணமாக இந்த பூங்கா செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் உள்ள விலங்கினங்கள் மற்றும் பறவைகள் மட்டும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பன்னாா்கட்டா தேசிய வனவிலங்கு பூங்காவின் அருகிலுள்ள ராகிஹள்ளி வனப்பகுதியின் அருகே வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் ஒரு புலியும், கரடியும் அடுத்தடுத்து வானப்பகுதியில் இருந்து வெளியே நடந்து செல்வது போன்று காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்தக் காட்சிகளை பாா்த்த வனத்துறையினா் இந்த இரண்டு விலங்குகளும் அருகில் உள்ள பன்னாா்கட்டா பூங்காவிலிருந்து வெளியேறி வந்துள்ளதா அல்லது வேறு வனப்பகுதியிலிருந்து வந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது சம்பந்தமாக 50க்கும் மேற்பட்ட வனத்துறையினா் தீவிர கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

புலி, கரடிகள் உலாவுவதால் அருகே உள்ள கிராமப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல கா்நாடக மாநில வனப்பகுதியையொட்டி தமிழக வனப்பகுதிகள் உள்ளதால் அதனையொட்டிய தமிழக கிராமப்பகுதிகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.