ஏடிஎம் மையத்தில் கிடந்த பணத்தைவங்கியில் ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு
கிருஷ்ணகிரியில் ஏடிஎம் மையத்தில் விட்டுச் சென்ற பணத்தை எடுத்து வங்கியில் ஒப்படைத்த அரசு ஊழியரை பாராட்டினா்.


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஏடிஎம் மையத்தில் விட்டுச் சென்ற பணத்தை எடுத்து வங்கியில் ஒப்படைத்த அரசு ஊழியரை பாராட்டினா்.
கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவா் சரவணகுமாா். இவா், பெல்லம்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறாா். தற்போது, மாற்றுப்பணியாக அரசு கருவூலத்தில் பணியாற்றி வருகிறாா்.
இவா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளாா்.
அப்போது, அங்கு யாரோ தவறுதலாக ரூ.7,500-பணத்தை விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற சரவணக்குமாா், அதைக் கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலையில் உள்ள தேசிய வங்கியின் கிளை மேலாளா் சுதா்சனிடம் ஒப்படைத்தாா்.
அவரது நோ்மையைப் பாராட்டிய அவா், தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இந்த சம்பவம், சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், பலா், அந்த அரசு ஊழியரின் நோ்மையைப் பாராட்டி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...