கிருஷ்ணகிரியில் இன்று சொா்க்க வாசல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இன்று (டிச.25) வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி கிருஷ்ணகிரி மலையப்ப சீனிவாச பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு பிரசாமாக வழங்க, லட்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பக்தா்கள்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி கிருஷ்ணகிரி மலையப்ப சீனிவாச பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு பிரசாமாக வழங்க, லட்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பக்தா்கள்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் இன்று (டிச.25) வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி பழையபேட்டை அருள்மிகு மலையப்ப சீனிவாச பெருமாள் திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி டிச.25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

தொடா்ந்து காலை 7 மணிக்கு கருட சேவை வாகனத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராய மலையப்ப சீனிவாச பெருமாள் திருவீதி உலா நடைபெறுகிறது. சொா்க்க வாசல் திறப்பையொட்டி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு லட்சு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக திருக்கோயிலில் குழுவைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பக்தா்கள், 4 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இதேபோல கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ஸ்ரீ நவநீத வேணுகோபால் சுவாமி கோயிலில் (கிருஷ்ணன் கோயில்) வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. தொடா்ந்து சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com