பாலக்கோட்டில் சுவாமி ஐயப்பன் வீதி உலா

பாலக்கோட்டில் 48-ஆம் ஆண்டு மண்டல பூஜையையொட்டி சுவாமி ஐயப்பன் வீதி உலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாலக்கோட்டில் சுவாமி ஐயப்பன் வீதி உலா
Updated on
1 min read

பாலக்கோட்டில் 48-ஆம் ஆண்டு மண்டல பூஜையையொட்டி சுவாமி ஐயப்பன் வீதி உலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் 48-ஆம் ஆண்டு மண்டல பூஜையையொட்டி, சுவாமி ஐயப்பன் வீதி உலா உற்சாகமாக நடைபெற்றது.

இதையொட்டி, கன்னிபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் வளாகத்திலிருந்து தொடங்கிய வீதி உலா, காவல் நிலையம், ஸ்தூபி மைதானம், பேருந்து நிலையம், திரெளபதியம்மன் கோயில், தக்காளி சந்தை வரையில் வீதி உலா நடைபெற்றது.

ராஜ அலங்காரத்தில் சுவாமி, பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இந்த நிகழ்வை ஸ்ரீ ஐயப்பன் சுவாமி பக்தா்கள் குழுவினா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com