மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சிறப்புப் பரிசு

ஊத்தங்கரை உட் கோட்டத்தில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார் டிஎஸ்பி ராஜபாண்டியன்.

News image
Updated On :10 ஜூலை 2020, 1:47 pm

DIN

ஊத்தங்கரை உட் கோட்டத்தில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார் டிஎஸ்பி ராஜபாண்டியன்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உட்கோட்டத்தில் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி, கல்லாவி, மத்தூர் என 5 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். கரோனா நோய்த்தொற்று வேகமாக பல இடங்களிலும் பரவி வரும் சூழலில் காவல்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

இதில் நூறு நாட்களுக்கும் மேலாக கரோனா பணி வழக்குகளை கையாளுதல் பிடி ஆனைகளை நிறைவேற்றுதல் போன்ற பணிகளை சிறப்பாக செய்த காவலர்களுக்கு ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மத்தூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் முதலாவதாகவும் சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் குமரன் இரண்டாவதாகவும் ஊத்தங்கரை உதவி காவல் ஆய்வாளர் சாந்தி மூன்றாம் பரிசுகளையும் பெற்றனர். 

இதுகுறித்து ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியன் கூறுகையில், கரோனா பணி மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஊத்தங்கரை உட்கோட்ட காவலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கி வருகிறோம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.