மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி அருகே துப்பாக்கிச்சூடு: முன்னாள் ராணுவ வீரர் கைது

கிருஷ்ணகிரி அருகே பெண் விவகாரத்தில் துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :21 ஜூலை 2020, 5:57 am

DIN

கிருஷ்ணகிரி அருகே பெண் விவகாரத்தில் துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி சேர்ந்தவர் மூர்த்தி (45). முன்னாள் ராணுவ வீரர். இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பண்டார பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணிற்கும் தகாத உறவு இருந்து வந்ததாம். இதை லட்சுமியின் உறவினர் முனுசாமி என்பவர் இவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார்.

இதனால் மூர்த்திக்கும் முனுசாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இத்தகைய நிலையில் முனுசாமி, மூர்த்தியின் விளைநிலம் அருகே கால்நடையாக திங்கட்கிழமை அன்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூர்த்திக்கும் முனுசாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இத்தகைய நிலையில் முனுசாமிக்கு ஆதரவாக அவரது மகன் நரசிம்மன் இடத்திற்கு வந்தார்.

அப்போது, மூர்த்தி தனது காரில் வைத்திருந்த பிஸ்டல் துப்பாக்கியை கொண்டு மூர்த்தி நரசிம்மன் இருவரை நோக்கி சுட்டுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து, குருபரப்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிந்து, மூர்த்தியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்‌ மேலும் மூர்த்தி பயன்படுத்திய துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

அவர் பயன்படுத்திய துப்பாக்கி உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.