ஊத்தங்கரையில் உலக செவிலியர் தின விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் கேக் வெட்டி இனிப்புகள், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் கேக் வெட்டி இனிப்புகள், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கொ.மாரிமுத்து தலைமை வகித்தார்.
ஊத்தங்கரை வட்டாட்சியர் செந்தில்குமாரன் முன்னிலை வகித்தார்.ஊத்தங்கரை வனிகர் சங்க தலைவர் மணி என்கிற செங்கோடன், செயலர் ர.உமாபதி, முன்னாள் அரிமா சங்கத் தலைவர் ஆர்கே ராஜா, ஜேஆர்சி ஆசிரியர் கு.கணேசன் ஆகியோர் செவிலியர்களுக்கு பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்கி வாழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் தியாகராஜன், ராசு, சுமித்ரா, மிருதுளா, இளவரசன் மற்றும் செவிலியர்கள் தீயணைப்பு துறை பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செவிலியர் தமிழ்செல்வி வரவேற்றார். இறுதியாக செவிலியர் விஜயா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...