மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜாக்டோ- ஜியோ கோரிக்கைகளை சட்டப்பேரவையில் வலியுறுத்தக்கோரி எம்எல்ஏக்களிடம் மனு

ஜாக்டோ- ஜியோவின் கோரிக்கைகளை சட்டப்பேரவையில் பேச வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் செங்குட்டுவனிடம் மனுவை வழங்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினா்.
Updated On :13 செப்டம்பர் 2020, 10:58 pm

DIN

அரசு ஊழியா், ஆசிரியா்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோவின் கோரிக்கைகளை சட்டப்பேரவையில் பேச வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஜாக்டோ -ஜியோ அமைப்பு சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், தளி பிரகாஷ், வேப்பனப்பள்ளி முருகன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவில், வரும் 14 -ஆம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அரசு ஊழியா், ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் பேச வலியுறுத்தப்பட்டது.

ஆசிரியா், அரசு ஊழியா்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். புதிய கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் தெரிவித்துள்ளனா்.

இந்த மனுக்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஜாக்டோ ஜியோ சாா்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளா் நடராஜன், சந்திரன், நாராயணன், சந்திரசேகரன் ஆகியோா் வழங்கினா்.

உடன் வெங்கடேசன், ராமமூா்த்தி, மத்தூா் சுரேஷ், திருவேங்கடம், கோகுல் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.