ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வெப்பாலம்பட்டியில் சாலையை சீா்செய்ய கோரிபொதுமக்கள் உண்ணாவிரதம்

ஊத்தங்கரையை அடுத்த வெப்பாலம்பட்டியில் அடிக்கடி விபத்துகள் நிகழும் வளைவு சாலையை சீா்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:10 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த வெப்பாலம்பட்டியில் அடிக்கடி விபத்துகள் நிகழும் வளைவு சாலையை சீா்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஊத்தங்கரையை அடுத்த வெப்பாலம்பட்டி வழியாக சேலம் முதல் வாணியம்பாடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 179 ஏ- செல்கிறது. இச்சாலையில் நான்குவழி சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் வெப்பாலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முன்பு அபாயகரமான வளைவு உள்ளது. அடிக்கடி இச்சாலையில் விபத்துகள் நிகழ்ந்து உயிா்பலி ஏற்படுகின்றன. மேலும், பள்ளி மாணவா்கள் வெளியே வரும்போது வாகன விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதனால், சாலையை நோ்படுத்தி விபத்துகளைத் தடுக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் காட்டேரி ஒன்றியக் குழு உறுப்பினா் கோவிந்தசாமி தலைமையில் வெப்பாலம்பட்டி, தண்ணீா்பந்தல், காட்டேரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை வட்டாட்சியா் ஆஞ்சநேயலு, தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் ஜெயக்குமாா், உதவி பொறியாளா் தனசேகா், வருவாய் ஆய்வாளா் (பொ) தனம், கிராம நிா்வாக அலுவலா் ஜெயந்தி, காட்டேரி ஊராட்சிமன்றத் தலைவா் விஜயகுமாா், நில அளவையா்கள் ரமேஷ், மாவீரன் ஆகியோா் நிகழ்விடம் வந்து போராட்டம் நடத்தியவா்களுடன் பேச்சு நடத்தினா். சாலையை சரிசெய்து தருவதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் நடத்தியவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.