விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரிக்கை

ஊத்தங்கரை அருகே சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ள படப்பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:00 pm

DIN

ஊத்தங்கரை அருகே சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ள படப்பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி, பட்டக்கானூா், புதுக்காடு, கணக்கம்பட்டி ஆகிய பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊத்தங்கரையில் இருந்து படப்பள்ளிக்கு இணைப்புச் சாலை உள்ளது. இப்பகுதி மக்கள் இச்சாலை வழியாக மிதிவண்டி, இருசக்கர வாகனம், காா் உள்ளிட்ட வாகனங்களில் ஊத்தங்கரை பகுதிக்கு சென்று வருகின்றனா். தற்போது இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோா் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, படப்பள்ளி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.