சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
ஊத்தங்கரையை அடுத்த வெங்கடதாம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மகளிா் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


ஊத்தங்கரையை அடுத்த வெங்கடதாம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மகளிா் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெங்கடதாம்பட்டி பகுதியில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த 2004-2005-ஆம் ஆண்டு சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2.25 லட்சத்தில் ஒருங்கிணைந்த மகளிா் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுமாா் 2 ஆண்டுகள் மட்டுமே பயன்பாடில் இருந்த இந்த வளாகம், மின்மோட்டாா் பழுதைக் காரணம் காட்டி கிடப்பில் போட்டுள்ளனா்.
2011-2012-ஆம் ஆண்டில் ஊரக கட்டடங்கள் பராமரிப்பு, புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1,99,454-த்தில் புனரமைப்பு செய்யப்பட்டு 6 மாதங்கள் கூட பயன்பாட்டில் இல்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
கடந்த 7 ஆண்டுகளாக முள்புதற்கள் மூடி காடு போல் இந்த சுகாதார வளாகம் காட்சியளிப்பதால், இப்பகுதி பெண்கள், குழந்தைகள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனா். இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...