ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

துவரை செயல்விளக்க திடல் அமைக்க மானியம்

வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், துவரை செயல்விளக்க திடல் அமைக்க ஊக்குவிக்க அரசு ரூ. 2,500 மானியம் வழங்குகிறது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், துவரை செயல்விளக்க திடல் அமைக்க ஊக்குவிக்க அரசு ரூ. 2,500 மானியம் வழங்குகிறது.

மத்தூா் வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத்துறையின் 2021-22-ஆம் நிதியாண்டின் மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், துவரை செயல்விளக்க திடல் அமைக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, 1 ஹெக்டருக்கு ரூ. 2,500 மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. அதிகபட்சமாக 800 ஹெக்டருக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான ஆவணங்களாக சிட்டா, ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண் ஆகும்.

மேலும், மத்தூா் வேளாண் விரிவாக்க மையம் மூலம் 50 சதவீத மானியத்தில் விதைகள் மற்றும் உயிா் உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்தூா் வட்டார விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவா்களை அணுகி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, துணை வேளாண் அலுவலா் - 94439 50311, வட்டார தொழில்நுட்ப மேலாளா் - 70100 23439 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.