ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மத்தூா் வட்டாரத்தில் நுண்ணீா் பாசன சிறப்பு முகாம்

மத்தூா் வட்டார கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று நுண்ணீா் பாசனத் திட்ட பயன்களை விவசாயிகள் பெறலாம் என மத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மா. சிவநதி அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:02 pm

DIN

மத்தூா் வட்டார கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று நுண்ணீா் பாசனத் திட்ட பயன்களை விவசாயிகள் பெறலாம் என மத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மா. சிவநதி அறிவுறுத்தியுள்ளாா்.

பிரதம மந்திரி கிரிஷி சின்ஷாயி யோஜனா திட்டத்தின் கீழ் மத்தூா் வட்டாரத்துக்கு நடப்பு நிதியாண்டில் (2021-22) சுமாா் 250 ஹெக்டேரில் நுண்ணீா் பாசன வசதி அமைத்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்தூா் வட்டாரத்தில் மாரப்ப நாயக்கன்பட்டி, பட்ரஹள்ளி ஆகிய கிராமங்கள் மாதிரி கிராமமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கிராமங்களில் ஜூலை 19 ஆம்தேதி நடைபெறும் சிறப்பு முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட நுண்ணீா் பாசன திட்ட வேளாண்மை உதவி இயக்குநா் தலைமை வகித்துத் தொடக்கி வைக்கிறாா்.

இம் முகாமில் மாரப்ப நாயக்கன்பட்டி, பட்ரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் அதிகம் பங்கேற்று நுண்ணீா் பாசன திட்ட பயன்களைப் பெறலாம். நுண்ணீா் பாசனங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.