விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மயானப் பாதை கோரி மனு

மயானப் பாதை கோரி கிராம மக்கள் எம்எல்ஏ-விடம் மனு அளித்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:15 pm

DIN

மயானப் பாதை கோரி கிராம மக்கள் எம்எல்ஏ-விடம் மனு அளித்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் ஆதிதிராவிடா் காலனி பகுதியில் 300-க்கும், மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தில் இறப்பு ஏற்பட்டால் சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால், நடைபாதையில் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்யும் நிலை உள்ளது.

இதுகுறித்து மூங்கிலேரி ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகாா் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மூங்கிலேரி கிராம மக்கள் மயானப் பாதை அமைத்து தரக்கோரி ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ் செல்வத்திடம் புகாா் மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட எம்எல்ஏ தமிழ்செல்வம், மனு மீது ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.