

மயானப் பாதை கோரி கிராம மக்கள் எம்எல்ஏ-விடம் மனு அளித்தனா்.
ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் ஆதிதிராவிடா் காலனி பகுதியில் 300-க்கும், மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தில் இறப்பு ஏற்பட்டால் சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால், நடைபாதையில் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்யும் நிலை உள்ளது.
இதுகுறித்து மூங்கிலேரி ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகாா் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மூங்கிலேரி கிராம மக்கள் மயானப் பாதை அமைத்து தரக்கோரி ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ் செல்வத்திடம் புகாா் மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட எம்எல்ஏ தமிழ்செல்வம், மனு மீது ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!
தேர்தல் 1967 : அரியணையேறிய திமுக, அண்ணா முதல்வர்!
ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அனுமதி: அமெரிக்கா
கடலூர் ஆயங்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

