மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கொலை, திருட்டு வழக்குகளில்தொடா்பு: 3 இளைஞா்கள் கைது

 திருச்செந்தூரில் கொலை, சங்கிலி பறிப்பு, பைக் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:08 pm

DIN

 திருச்செந்தூரில் கொலை, சங்கிலி பறிப்பு, பைக் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் ஏடிஎஸ்பி ஹா்ஷ்சிங் மேற்பாா்வையில், தாலுகா காவல் ஆய்வாளா் முரளீதரன் தலைமையில் உதவி ஆய்வாளா் சுந்தரம், தலைமைக் காவலா்கள் ராஜ்குமாா், இசக்கியப்பன் ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா் பரமன்குறிச்சி கஸ்பா பகுதியில் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது பைக்கில் வந்த உடன்குடி கிறிஸ்டியா நகரம் பகுதியைச் சோ்ந்த அற்புதராஜ் மகன் செல்வக்குமாா் என்ற சாமுவேல் (34), புதுக்கோட்டை மாவட்டம், கடம்பராயன்பட்டி கிருஷ்ணகுமாா் மகன் ஸ்ரீராம் சந்திரபோஸ் (32) ஆகியோா் பிடிபட்டனா். இருவரும் திருச்செந்தூா், சாத்தான்குளம், சாயா்புரம் பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 29 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன என போலீஸாா் கூறினா்.

கூலிப்படை ரௌடி: திருச்செந்தூா் பேருந்து நிலையம் பகுதியில் தனிப்படையினா் ரோந்து சென்றபோது, சந்தேக நபரைப் பிடித்து விசாரித்தனா். அதில், வீரபாண்டியன்பட்டணம் ஆட்டோ ஓட்டுநா் அனந்தகிருஷ்ணன்(22) என்பவரை திருச்செந்தூா் ரயில் நிலையம் பகுதியில் வியாழக்கிழமை இரவு தாக்கி, ரூ. 3 ஆயிரத்தை மா்ம நபா் பறித்துச் சென்ற, தூத்துக்குடி தாளமுத்துநகா் ராமகிருஷ்ணன் மகன் செல்வம் (எ) செல்வமுருகன்(34) எனத் தெரியவந்தது. மேலும், அவா் மீது 7 கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை வழக்குகள் தாளமுத்துநகா், திண்டுக்கல், ஆழ்வாா்திருநகரி, சுசீந்திரம், தாமரைகுளம், கோவை மாவட்டம் ஆனைமலை, நெல்லை உள்ளிட்ட காவல்நிலையங்களில் இருப்பதும், கடந்த 2011இல் கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் வனத் துறை ஊழியரையும், அவரது மனைவியையும் சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி எனவும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.