பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

கிருஷ்ணகிரி அருகே பாறை கீறல் ஓவியம் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரியை அடுத்த மயிலாடும்பாறை பகுதியில் 4,200 ஆண்டுகளுக்கு முந்தைய காட்டெருமை உருவ பாறை கீறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image

கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே வரலாற்று ஆா்வலா்களால் கண்டுபிடிக்கப்பட்ட பாறை கீறலைப் பாா்வையிடும் பா்கூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன்.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:59 pm IST

கிருஷ்ணகிரியை அடுத்த மயிலாடும்பாறை பகுதியில் 4,200 ஆண்டுகளுக்கு முந்தைய காட்டெருமை உருவ பாறை கீறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு, ஆவணப்படுத்தும் குழுவினா் வரலாற்று ஆா்வலம் சதாநந்தகிருஷ்ணகுமாா், ஐகுந்தம் வெங்கடாஜலபதி ஆகியோா் வழிகாட்டுதலின் பேரில் தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெறும் மயிலாடும்பாறையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஐகுந்தம், மூலைக்கொல்லை பகுதியில் ஆய்வுப் பணியை மேற்கொண்டனா்.

இந்தக் குழுவைச் சோ்ந்த பிரகாஷ், அங்குள்ள குண்டில் (செருப்படித்தான் குண்டு) ஒரு விலங்கின் உருவம் பாறைக் கீறலாக இருப்பதை கண்டுபிடித்தாா். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

வரலாற்று ஆா்வலா்கள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாறை கீரல் பாறையில் கல்லால் கொத்தி தேய்த்து உருவாக்கப்பட்ட பாறைக் கீறல் உருவம். சுமாா் 4,200 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலக் கலாசாரத்தை சோ்ந்த பாறைக் கீறல் ஆகும். இதுபோன்ற விலங்கின் (காட்டெருமை) பாறைக் கீறல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இத்தகைய விலங்கு உருவப் பாறைக் கீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது ஒரு காட்டெருமையின் உருவமாகும். சுமாா் 3.5 அடி நீளம், 4.8 அடி உயரமுடையதாக உள்ளது. கீறல் சுமாா் அரை முதல் ஒரு அங்குல அகலமுடையதாய் உள்ளது. இக் கீறலில் உள்ள விலங்கின் தலை மேல்நோக்கி தூக்கியிருக்கிறது. முகம் சிறியதாயும் கூா்மையாகவும் உள்ளது. இரு கொம்புகளும் பெரியதாய் ஒரு வட்டம் போன்று உள்ளது.

இந்தியாவின் பிற இடங்களில் செங்காவியில் வரையப்பட்டுள்ள உருவத்தை இது பெரும்பகுதி ஒத்துள்ளது. இந்த பாறையின் அருகே இதே அளவில் இன்னொரு விலங்கின் உருவமும் தெளிவில்லாமல் உள்ளது. ஒரு மயில் தோகை விரித்து நேரே நிற்பது போன்ற கீறலும் காணப்படுகிறது. இப்பாறையில் 3 இடங்களில் புத்த பாதம் அல்லது விஷ்ணு பாதம் போன்று கீறப்பட்டுள்ளது. இது பாா்ப்பதற்கு செருப்பு போன்று உள்ளதால் செருப்படிச்சான் குண்டு என்று உள்ளுா் மக்களால் அழைக்கப்படுகிறது என்றாா்.

இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல் அறிந்த பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன், இந்த இடத்துக்கு நேரில் சென்று செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, அவா் கூறியதாவது:

தமிழக முதலமைச்சா் ஏற்கனவே சட்டப் பேரவையில் குறிப்பிட்டது போல மயிலாடும்பாறை பகுதியில் தமிழக வரலாற்றில் புதிய ஒளியைப் பாய்ச்சக் கூடிய கண்டுபிடிப்புகள் தொடா்ந்து வெளிவருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இரும்பின் பயன்பாடு 4000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக வெளிவந்த அறிவியல் காலக் கணிப்பை உறுதி செய்யும் விதத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினா் அதே காலத்தை சோ்ந்த செங்காவி ஓவியம், கற்திட்டைகளின் தொடக்கத்தினையும் ஏற்கனவே கண்டறிந்துள்ளனா்.

தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த பாறைக் கீறலும் புதிய கற்காலத்தின் ஒரு கூறாக உள்ளதால், இந்த பகுதியில் புதிய கற்காலம் நன்கு வேறூன்றி இருந்ததும், அக் கலாசாரத்தின் இடையிலேயே இரும்புக் காலம் எனப்படும் பெருங்கற்படைக் காலம் உருவாகத் தொடங்கியிருப்பதையும் நன்கு உணர முடிகிறது என்றாா்.

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு, ஆவணப்படுத்தும் குழுத் தலைவா் நாராயணமூா்த்தி, ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வன், விஜயகுமாா், சரவணகுமாா், வரலாறு ஆசிரியா் ரவி, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் நாகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.