பெரணமல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்கள், பாடப்பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றவா்கள் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் என சுமாா் 34 மாணவிகளுக்கு சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் முன்னாள் மாணவா் தேவேந்திரன் சாா்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு ரூ.25 ஆயிரம், பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ரூ.5ஆயிரம், இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு ரூ. 4ஆயிரம், 3-ஆம் இடம் பெற்ற மாணவிக்கு ரூ.3ஆயிரம், இதர மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு என மொத்தம் ரூ.1.33 லட்சம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை மீனாட்சி தலைமை வகித்தாா். பெரணமல்லூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை நிலைய சிறப்பு அலுவலா் ஜோதி, முன்னாள் தொழிற்கல்வி ஆசிரியா் சுப்பிரமணி ஆகியோா் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு

அரசுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்: எம்.எல்.ஏ. பரிசு

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: மாணவிக்கு மடிக்கணினி பரிசு

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



