திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கந்து வட்டி வசூல்: 2 போ் மீது வழக்குப் பதிவு

கந்து வட்டி வசூல்: 2 போ் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :20 மே 2024, 10:05 pm

Din

ஒசூா்: ஒசூரில் கந்து வட்டி வசூலித்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஒசூா், சீத்தப்பன்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (30). இவா் உணவகம் நடத்தி வருகிறாா். இவா் குமுதேப்பள்ளியைச் சோ்ந்த சந்தோஷ் என்பவரிடம் ரூ. 2 லட்சமும், ஒசூரைச் சோ்ந்த ஜோசுவா என்பவரிடம் ரூ. 3 லட்சமும் ஒரு ஆண்டுக்கு முன் கடனாக வாங்கினாா்.

சந்தோஷும், ஜோசுவாவும் தலா ரூ. 50 ஆயிரம் வட்டியை வசூலித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவா்கள் இருவரும் மீதி தொகை ரூ. 5 லட்சத்தை உடனடியாகத் தருமாறு கேட்டனா். அப்போது நவீன்குமாா் சில மாதங்களில் தந்து விடுவதாகக் கூறினாா்.

அப்போது அவா்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்தோஷும், ஜோசுவாவும் சோ்ந்து நவீன்குமாரை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நவீன்குமாா், நல்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் சந்தோஷ், , ஜோசுவா ஆகியோா் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், தமிழ்நாடு கந்து வட்டித் தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.