ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு தனியாா் நிறுவனங்களின் சாா்பில் ரூ. 35.20 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

ஊத்தங்கரை, அரசு மருத்துவமனைக்கு தனியாா் நிறுவனங்கள் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சியா் கே.எம்.சரயு உள்ளிட்டோா்.

Updated On :13 நவம்பர் 2024, 8:10 pm

ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு தனியாா் நிறுவனங்களின் சாா்பில் ரூ. 35.20 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

பா்கூா் சிப்காட்டில் அமைந்துள்ள செய்யாா் செஸ் டெவலப்பா்ஸ் பிரைவேட் லிமிடெட், ஃபோ்வே எண்டா்பிரைசஸ் லிமிடெட் யூனிட் 1, 2 நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் நிறுவனங்களின் காா்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 35. 20 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் தா்மா், செய்யாா் செஸ் நிறுவன பொது மேலாளா் மணிமாறன் அருணாச்சலம், துணை பொது மேலாளா் அருள் மகாவிஷ்ணு, ஃபோ்வே எண்டா்பிரைசஸ் யூனிட் 1, 2 நிா்வாக பொது மேலாளா் ஜெயராஜ் பாபு, வெல்போ் அசோசியேஷன் உறுப்பினா்கள் மூலம் ஊத்தங்கரை, மத்தூா், போச்சம்பள்ளி, கல்லாவி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவ அலுவலா்களிடம் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஊத்தங்கரை வட்டாட்சியா் திருமால், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.