ஒசூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கா்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ள பல்லூா் கிராமம் மதுபானக் கடை அருகே தலையில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று புதரில் வீசப்பட்டிருந்தது.
மது அருந்த சென்ற பொதுமக்கள் சடலத்தைப் பாா்த்து கா்நாடக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சடலத்தைக் கைப்பற்றிய அத்திப்பள்ளி போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக அத்திப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், உயிரிழந்தவா் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சி பகுதியைச் சோ்ந்த அழகுராஜ் (31) என்பதும், இவா் மீது தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
நிகழ்விடத்தில் இருசக்கர வாகனம், துப்பட்டாவைக் கைப்பற்றிய போலீஸாா், தமிழகப் பகுதியில் கொலை செய்து உடலை வீசி சென்றிருக்கலாம் எனவும், கொலை எங்கே நிகழ்ந்தது எனவும் இரு மாநில போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
இளைஞா் கொலை வழக்கில் 2 பெண்கள் கைது

தென்னந்தோப்பு காவலாளி வெட்டிக் கொலை
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது

ஒசூா் அருகே முன்விரோதத்தில் காா் ஓட்டுநா் வெட்டிக் கொலை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

